சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடும்.
ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.