மன்னாரில் நேற்று மாலை அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் 37 வயதுடைய ஒருவர் இறந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (29) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் நேற்று வரை 52 ஆயிரத்து 682 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர 550 பேருக்கு ஏற்கனவே 2 ஆவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு 2 ஆவது தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.
எனவே மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும்,நமது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.