மட்டு வெல்லாவெளியில் மணல் ஏற்றி சென்ற இருவருக்கு 225000ரூபா அபராதம்!

download 1 86
download 1 86

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து சிறிய ரக பட்டா வாகனம் ஒன்றிலும் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றிலும் ஏற்றி சென்ற இருவரை 225000 ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவானுமாகிய கருப்பையா ஜீவராணி இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார்.

வெல்லாவெளி காவல்துறை பிரிவில் நேற்று புதன்கிழமை சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து அதனை சிறியரக பட்டா வாகனத்திலும் உழவு இயந்திரத்திலும் ஏற்றி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன் வாகனத்தையும் உழவு இயந்திரத்தையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று வியாழக்கிழமை (29) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சிறிய ரக பட்டா வாகனத்தில் மணல் ஏற்றியவருக்கு ஒரு இலச்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றியவருக்கு ஒரு இலச்சம் ரூபாயும் மொத்தம் 2 இலச்சத்து 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.