பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் பலி

murder knife crime stab generic 360
murder knife crime stab generic 360

கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

நேற்று (30) மாலை 6 மணி அளவில் கஹடகஸ்திகிலிய காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

44 வயதுடைய பெண் ஒருவரும் 46 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தம்பதியினர் எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.