ஓமானிலிருந்து நாடு திரும்பியவருக்கே முல்லைத்தீவில் டெல்டா வைரஸ் தொற்று

டெல்டா
டெல்டா

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று பரவல் இல்லை ஒருவரே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் விசேட வைத்திய அதிகாரி வி.விஜிதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தெரிவித்த அவர், முல்லைத்தீவைச் சேர்த ஒருவர் ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில்,அவருக்கு டெல்டா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதாகவும் அவரால் முல்லைத்தீவில் சமூகத்தொற்று இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.