கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் வான் ஒன்றின் ரயர் வெடித்ததில் வேக கட்டுப்பட்டை மீறி மோட்டர் சைக்கிள் இரண்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சம்சுதீன் சஹாப்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை காவல்துறை பிரிவிலுள்ள நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் சம்பவதினமான நேற்று இரவு 8 மணியளவில் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று பகுதியை நோக்கி பிரதான வீதியில் பிரயாணித்த டொல்பீன் ரக வான் ஒன்று அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து வானின் ரயர் ஒன்று வெடித்ததையடுத்து வானின் வேககட்டுப்பாட்டை மீறி எதிரே அக்கரைப்பற்றில் இருந்து நிந்தவூருக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் பிரயாணித்த மோட்டர்சைக்கிளுடனும் இன்னொரு மோட்டர்சைக்கிளுமாக இரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையர் உயிரிழந்ததுடன் மகன் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வானை செலுத்திய சாரதியை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.