அமரர் ஆர்.இராஜமகேந்திரனது ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை!

download 4 1
download 4 1

ஹப்பிடல் மகாராஜா குழுமத் தலைவர் அமரர் ஆர்.இராஜமகேந்திரன் அவர்களது ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனையும் நினைவஞ்சலியும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 03:30 மணிக்கு ஆரம்பமான ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் சர்வமதத் தலைவர்களான சிவகுரு ஆதீன வேலன் சுவாமி, நாகவிகாராதிபதி மீஹாஜந்துர விமல சுவாமி தேரர், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார், மெளலவி பி.ஏ.எஸ்.சுபியான் ஆகியோர் இணைந்து திருவுருவப் படத்திற்கான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்து, ஆத்மசாந்திப் பிரார்த்தனையை மேற்கொண்டனர்.

ஆனந்த சங்கரி, மாவை சேனாதிராஜா, செ.கஜேந்திரன், அனந்தி சசிதரன், த.சசிதரன், சி.க.செந்திவேல், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், தி.நிரோஷ், மு.கோமகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.