இலங்கையின் பல பிரதேசங்களில் பால் மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உள்ளூர் சந்தையில் பால் மாவுக்குத் தட்டுப்பாடுகள் நிலவுகின்றது.
பால் மா நிறுவனங்கள் விலை அதிகரிப்புக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அதற்கு அனுமதி வழங்காத நிலையிலேயே இந்தத் தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.