கரும்புள்ளியானில் காயவைத்த நெல்லுக்கு தீவைத்த விசமிகள்!

received 355732726141960
received 355732726141960

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் அறுவடை செய்த நெல்லினை  நெல் உலரவிடும் தளத்தில் காய வைத்தவேளை விசமிகளால் நெல்லிற்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் 25 மூடை நெல் நாசமாகியுள்ளதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

received 985460412244361

கரும்புள்ளியான் கிராமத்தினை சேர்ந்த பஞ்சலிங்கம் என்ற விவசாயி கீரி சம்பா நெல்லினை அறுவடை செய்து  கமக்கார அமைப்பிற்குரிய நெல்லு உலரவிடும் தளத்தில் காயவைத்துள்ளார்
08.08.21 அன்று மதியம் நெல்லினை காய வைத்தவர்கள் மதிய உணவிற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்ற வேளை இனம் தெரியாத விசமிகளால் நெல் தளத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளது.

35 பை நெல்லினை கொட்டி காயவிட்ட வேளை  எரிந்த மிச்சம் என 15 பை நெல்லினையே மீட்டுள்ளதாகவும் 25 பை நெல்லு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.

received 373382717685113


இது குறித்து கமக்கார அமைப்பிற்கும் விவசாய போதனாசிரியருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.

IMG 20210809 WA0005


கரும்புள்ளியான் கிராமத்தில் நடைபெறும் பொதுவான பிரச்சனைகளை காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியும் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை அதனால் இச்சம்பவம் தொடர்பில் காவற்துறையினரிடம் தாங்கள் முறையிடவில்லை என்றும் கிராம விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.