எந்தவொரு அரச நிறுவனமோ அல்லது மாகாண அரச நிறுவனமோ வெளிநாடுகளுடன் எந்தவொரு உடன்படிக்கையையோ, புரிந்துணர்வு உடன் படிக்கையையோ மேற்கொள்ள முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே வர்தன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உள்ள விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படுவதற்கு இதன் மூலம் முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் ஒழுக்கத்தை எற்படுத்த அரச நிருவாகம் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.