ஆப்கானிலிருந்த 8 இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு அழைப்பு!

abcfc35f481c20e9c87daa029032fa3a
abcfc35f481c20e9c87daa029032fa3a

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த 8 இலங்கையர்கள் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் மேலும் 43 இலங்கையர்கள் அங்கு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.