அரச ஊடகமான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் இன்று மாலை வெளியாகியிருப்பதாக தெரியவருகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டிணைவு முடிவுக்கு வந்த நிலையில் அரச ஊடகங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தலைமையிலான அணியினரும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அணியினரும் தீவிரம் காட்டிவந்திருந்தனர்.
இந்தச் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.