தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 581 பேர் கைது

thanimai
thanimai

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்று பரவுவதை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று (29) மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த 1792 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.