கொட்டகலையில் 14 நெடுங்குடியிருப்புகள் தனிமைப்படுத்தல்!

download 1 42 150x150 1
download 1 42 150x150 1

கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்தின் சாமஸ் பிரிவின் 14 நெடுங்குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த நெடுங்குடியிருப்புகளை சேர்ந்த 43 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தொற்றுறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தநிலையில், கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தின் – சாமஸ் பிரிவின் 14 நெடுங்குடியிருப்புகளை சேர்ந்தவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர்களுக்கான தடுப்பூசிகள் பிறிதொரு தினத்தில் செலுத்தப்படும் என கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.