நேற்று கொரோனாவால் 215 பேர் பலி!

corona death28 1 6
corona death28 1 6

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 100 பெண்களும் 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.