வடக்கில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 75 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

corona death28 1 8
corona death28 1 8

வட மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 75 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாட்களில் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை (செப். 6) 11 பேர் கொவிட்- 19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் என 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.