பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிற்கு செல்ல மாட்டேன்-சிவாஜிலிங்கம்

sivajilingam 1 1
sivajilingam 1 1

நாளைய தினம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாக முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய வைத்திய பரிசோதனைக்காக தாம் செல்ல இருப்பதனால் நாளை மறுதினம் தாம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் முன்னிலையாவதாகவும் இதன் போது அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக எதிர்வரும் 27ம் திகதி விசாரணைகளுக்காக பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவிற்கு வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.