நாட்டில் நேற்றைய தினம் 2,475 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 2,473 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகி உள்ளதுடன், 2 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இதுவரை தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 490,957 ஆக அதிகரித்துள்ளது.