விமான நிலையத்தில் பி.சி.ஆர். ஆய்வகம்:மூன்று மணி நேரத்துக்குள் பெறுபேறு!

pearlonenews பி.சி.ஆர். சோதனைக்குரிய உபகரணங்கள்
pearlonenews பி.சி.ஆர். சோதனைக்குரிய உபகரணங்கள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். ஆய்வகம் ஒன்று எதிர்வரும் 20ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தப் புதிய பி.சி.ஆர். ஆய்வகமானது நாளாந்தம் 7 ஆயிரம் பி.சி.ஆர். சோதனைகளை முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதன் மூலம் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பி.சி.ஆர். சோதனை அறிக்கையானது மூன்று மணி நேரத்துக்குள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.