வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு!

cement
cement

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகளை முன்னெடுக்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கான சீமெந்துக்கு வவுனியாவில் திடீர் என தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் கிராம புறங்களில் அமைந்துள்ள கட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களிற்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதற்காக செல்லும் பொதுமக்கள் அங்கு இல்லாமையால் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.