வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

DSC08699
DSC08699

வவுனியாவில் 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்டவர்களிற்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றுவரும் இத்தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டில் இளைஞர், யுவதிகள் சமூக இடைவெளிகளை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகளை ஆர்வமாக பெற்றுச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.