சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது

kaithu
kaithu

திருகோணமலை – மொரவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெலுஓய வனப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரவெவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள், மஹதிவுல்வெவ மற்றும் ஹொரவபொத்தானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, மணல் அகழ்விற்காக பயன்படுத்திய உழவு இயந்திரத்தினை காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.