வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேறு

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளை கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை(25) முதல் இதனூடாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.