அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதி, நொச்சியாகம லிந்தவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், இரு காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விசேட சுற்றிவளைப்புக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நொச்சியாகம காவல்துறை அதிகாரிகள் இருவரே இராணுவ கப் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.