திலீபனின் நினைவுத் தூபியை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை

612d802b a5b2 40c4 a21a 5d2ffd3c7aef
612d802b a5b2 40c4 a21a 5d2ffd3c7aef

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு காவல்துறையினருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

1987 செப்டம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்டம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 34ஆவது ஆண்டு நினைவு வாரம் கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.