கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞ. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்று இடம்பெற்றது.
கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த மாதம் 2ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
அவரின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை கொடிகாமம் வெள்ளம்போக்கட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல்பிரமுகர்கள் , ஊடகவியலாளர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.