சிறுபான்மை கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்குமிடையில் சந்திப்பு

election commission
election commission

தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் இடம்பெற்ற தேர்தல்கள் மறுசீரமைப்புக்கான தெரிவுக்குழுவிற்கு அறியப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, குறித்த தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடத்தில் கோரவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் குறிப்பிட்டார்.