வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 85 பாடசாலைகள் நாளை (21) முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலயங்களுக்கு உட்பட்ட 85 பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளைக் கட்டம் கட்டமாக மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.