மொறட்டுவையில் இரு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: 18 பேர் கைது

kaithu

மொறட்டுவை பகுதியில் இரு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும்  உள்ளடங்குவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.