ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு ஜே/39 பகுதியில் நேற்று(30) பெய்த மழை காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுதெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்து வரும் நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கூரைப் பகுதி சேதமடைந்ததால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்படைந்துள்ளனர்.