முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

received 405807781029535
received 405807781029535

முன்களப்பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு உன்ணாப்புலவு வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆகிய இடங்களில் மூன்றாவது பூஸ்ட் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றன .

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் ஏனைய முன்களப்பணியாளர்கள் பலர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

இரண்டு தடுப்பூசிகளை ஏற்றி ஆறு மாதங்களை கடந்த நிலையில் சுமார் 1015 பேர் குறித்த மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தகுதியுடைய நிலையில் காணப்படுவதாக அறியமுடிகிறது