ஆயுர்வேத வைத்தியர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம்

20211105 123633
20211105 123633

வேலையற்ற பட்டதாரிகள் ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் பங்கேற்றிருந்தனர்.

சேதனப்பசளையை ஊக்குவிக்கும் அரசு சுதேச மருத்துவத்தை நிராகரிப்பது ஏன்? போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.

போராட்டத்தின் பின்னர் வடமாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.