கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்மேடொன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த குறித்த நால்வரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.