கேகாலையில் மண்சரிவில் சிக்கிய மூவர் மீட்பு: இருவர் மாயம்

download 17
download 17

கேகாலை – கலிகமுவ பிரதேசத்தில் நேற்றிரவு பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்போது வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீட்டில் வசித்து வந்த மூவர் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.