கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கீழ்கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடல்!

samayam tamil 8
samayam tamil 8

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ்கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், கீழ்கடுகண்ணாவ பகுதிக்கு மண்சரிவு அபாயம் நிலவுவதால் இவ்வாறு இந்தப் பகுதி மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த வீதியின் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.