யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,188 குடும்பங்களைச் சேர்ந்த 33,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கடும் மழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த 96 குடும்பங்களைச் சேர்ந்த 308 நபர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.