மனைவியை கொலை செய்த கணவன்

death 1
death 1

குடும்பத் தகராறு நீண்டதில் கணவன், தனது மனைவியை பொல்லு ஒன்றால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று மாத்தறை – மாலிம்பட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாலிம்பட மீகஹகொடகே தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.