கொஸ்லந்தை ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபருக்கு கொவிட்

corona 2
corona 2

ஹல்தமுல்லை – கொஸ்லந்தை ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை அந்தப் பாடசாலை மூடப்பட்டுள்ளது.

ஹல்துமுல்லை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஹல்தமுல்லை – கொஸ்கம ஆரம்ப பாடசாலை ஒன்றின் கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

அந்தப் பாடசாலையின் மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்