தம்பலகாமத்தில் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

41f79eb06e6390a72e48462c64a53cf71ea3b74636b8c8a6eabd8a7ad906a742
41f79eb06e6390a72e48462c64a53cf71ea3b74636b8c8a6eabd8a7ad906a742

திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்மெட்டியாவ, உல்பத்வெவ பகுதியில் குறித்த இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ளன.

எட்டு வயதுக்கு மேற்பட்டவையாக  கருதப்படும் இந்தஇரண்டு காட்டு யானைகளும் நேற்றிரவு (10) உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவை உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை என்றும், மின்சாரம் தாக்கியதால் இவை உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேற்படி இரு யானைகளும் உயிரிழந்த நிலையில் சுமார் 20 மீற்றர் இடைவெளியில் விழுந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மற்றும் வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.