கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் வீடுகளுக்கான இலவச குடி நீர் இணைப்பை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் செவ்வாய் கிழமை (16) உதயநகர், கிழக்கு, உதயநகர் மேற்கு, ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மேற்படி மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோத்தகர்கள் வீடு வீடாக வருகை தரவுள்ளனர், எனவே புதிய நீர் இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் விண்ணப்படிவத்தை பெற்று வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.11.2021 வெள்ளிக் கிழமை கிளிநொச்சி 155 கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில் கையளிக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலக தொலைபேசி இலக்கமான 021 2283981 தொடர்பு கொள்ள முடியும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.