ராஜா கொல்லுரேவை நீக்குவதற்கு எதிரான தடை உத்தரவு மேலும் நீடிப்பு!

Raja 2021.10.24 1
Raja 2021.10.24 1

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, வட மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு இலங்கை கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக ராஜா கொல்லுரே தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அலுத்கே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, குறித்த தடை உத்தரவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.