சீரற்ற காலநிலையால் யாழில் 10320 குடும்பங்களை சேர்ந்த 34219 பேர் பாதிப்பு!

edited Riding in flooded Colombo 2

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 10320 குடும்பங்களை சேர்ந்த 34219 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 47 குடும்பங்களை சேர்ந்த 164 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.