கொழும்பில் இன்றிரவு முதல் 28 மணித்தியால நீர்வெட்டு

water cut
water cut

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை 28 மணித்தியாலங்களுக்கு இடை நிறுத்தவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்று(13) இரவு 8 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை மேற்படி நீர்விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 04,05,06,07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும், கோட்டே மற்றும் கடுவலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலையிலிருந்து கோட்டே நீர்த்தாங்கிக்கு நீரைக் கொண்டுசெல்லும் பிரதான விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக, இந்த நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது