பாதுக்கை காவல்துறை பிரிவில் அருக்வத்தை பிரதேசத்தில் பாதுக்கை காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வெடி மருந்துகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபரிடமிருந்து இரு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 53 வயதுடைய அருக்வத்தை, பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
பாதுக்கை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.