அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

slfp 1
slfp 1

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட சுதந்திரக் கட்சி கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்று (14) அநுராதபுரத்தில் கூட்டம் நடைபெற்றது.

சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் சமன் குமார, இது தொடர்பான தீர்மானத்தை முன்வைத்ததுடன் அனைவரும் ஏகமனதாக ஆதரவளித்தனர்.