எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

image 3c4575d696 750x375 1
image 3c4575d696 750x375 1

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் என தெரிவித்த அவர், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென எரிசக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.