களுத்துறை வடக்கு, தொட்டுபல சந்தியில் பேருந்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா, அஸ்கிரிய பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இடம்பெறும் விதம் அருகில் இருந்த சி சி டி வியில் பதிவாகியிருந்தது.
கொழும்பில் இருந்து அம்பலாங்கொட நோக்கி பயணிதத பேருந்து ஒன்றுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.