படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயம்

fishermen newestest
fishermen newestest

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழந்து காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதுடன் படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திரைய்மடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர்.