4 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

death in ganga river
death in ganga river

வவுனியா – பாவற்குளத்திற்கு தாயுடன் நீராட சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராட சென்றுள்ளார்.

இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பி பார்க்கும் போது, குளத்திற்குள் நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. இதையடுத்து தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் கிராமத்தினரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியை சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே மரணமடைந்துள்ள நிலையில் இது தொடர்பில் உளுக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.