தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களது பிரச்சினைகளை நாளுமன்றத்தில் கதைக்காது தேவையில்லாத விடயங்களை கதைப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மீனவர்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.